கார்த்திகா ஜோதிடப் பேரவை

கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையம் என்ற அமைப்பின் கீழ் இயங்கும் பல துறைகளிலுள்ள சேவைப் பிரிவில் முக்கிய அங்கம் வகிப்பது கார்த்திகா ஜோதிடப் பேரவை எனும் சேவைப் பிரிவாகும். செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய செயல் அலுவலர்களைக் கொண்ட இந்த பேரமைப்பு ஆயிரக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்டது. கார்த்திகா வித்யாபவன் அறக்கட்டளை, கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையம் மற்றும் பல நிறுவனங்களை நிறுவிய தலைவரான குருஜி அவர்கள் இப் பேரவைக்கு தலைமைப் பொறுப்பேற்று நிரந்தரத் தலைவராக அங்கம் வகிக்கிறார். செயலாளர், பொருளாளர் மற்றும் செயற்குழு ஊறுப்பினர்கள் ஆகிய சேவைப் பிரிவு அலுவலர்கள் ஒவ்வொரு தமிழ் ஆண்டின் சித்திரை மாதம் முதல் தேதியன்று கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையத்தில் நடைபெறும் செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டத்தின் பொழுது தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.

கார்த்திகா ஜோதிடப் பேரவை தேர்தல் முடிந்த அன்றைய தினம் பதவி ஏற்புக்குப் பின்னர் ஆன்மிக சேவையாகிய ஆன்மிக சுற்றுப் பயணத்திற்கு ஏற்பாடு செய்தல், குரு பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி போன்ற கிரஹ மாற்றங்கள் ஏற்படும் காலத்தில் பூஜைகளை ஏற்பாடு செய்தல், இலவச ஜோதிட முகாம் நடத்துதல் இன்னும் பல ஆன்மிக பொது சேவைகளில் ஈடுபட்டு தொண்டாற்றுதல், நலிந்தோருக்கு உதவுதல் போன்ற சேவை செயல்பாடுகளுக்கு முன்வரைவு திட்டத்தின் கருத்துரு தயாரிக்கப்பட்டு பேரவையால் ஒப்புதல் பெறப்படுகிறது. ஆன்மிக பெருமக்களுக்கும், நலிந்தோருக்கும் சேவை செய்வது இறைவனைப் பணிந்து வழிபாடு செய்வதற்கு ஒப்பாகும் என உபதேசிக்கும் இந்த நிறுவனத் தலைவர் குருஜி அவர்களின் கொள்கைகளை நிறைவேற்றுவதே இந்தப் பேரவையின் தலையாய திருப்பணியாக உள்ளது. தனி நபர் மேம்பாடு என்பதில் இந்தப் பேரவை மிகவும் கவனம் செலுத்துகிறது.
பிள்ளையார் சுழி, அதன் கீழ் ஓம் என்ற ப்ரணவ மந்திரம், பின்னர் ஸ்ரீ கோமதி சங்கர நாராயணாய நம : என்ற வழிபாட்டு சொற்கோவை, அதன் பின் அருஉருவாகிய பரமேஸ்வரன் குடி கொண்டிருக்கும் சிவலிங்கம், இடவலமாக ஆபத்தை முன்னறிவிக்கும் பாஞ்சஜன்யம் என்னும் சங்கும், தீயனவற்றை அழிக்கும் சுதர்ஸன சக்கரமும் மஹாவிஷ்ணுவின் திரு அடையாளமாக உள்ளதென ஏற்று அதன் மத்தியில் முருகப் பெருமானின் வேலுடன் இணைந்த மஹா சக்தியின் சூலாயுதம் ஆகிய அனைத்தையும் கொண்ட சைவ, வைஷ்ணவ சம்பிரதாய பேதமற்ற இணைவு பிம்பங்களை குருஜி அவர்கள் இந்த நிறுவனத்திற்கு அடையாளச் சின்னமாக அறிவித்துள்ளார்கள். இப்பூவுலகிலுள்ள அனைத்திற்கும் இறைவன் ஒருவனே மூலாதாரம் என்றும், இவ்வுலகில் உள்ள அனைத்தும் இறைவனால் மனிதனுக்கு வழங்கப்பட்ட அன்பளிப்பு என்றும், எவ்வித பேதமும் எந்தக் குறையும் இன்றி மனித குலம் வாழ வேண்டும் என இறைவன் விரும்புகிறான் என்பதும் இதன் பொருள். இந்த சூத்திரத்தை வலியுறுத்தி தெளிவுரை வழங்கிய குருஜி அவர்கள் ஆன்மிக உணர்வும், தர்ம சிந்தனையும், நலிந்தோருக்கு உதவும் உள்ளமும் கொண்ட இப்பேரவையின் அனைத்து உறுப்பினர்களும் முக்கிய சேவைகளில் ஈடுபடும் பொழுது மஞ்சள் நிற ஆடை, நெற்றியில் செஞ்சாந்து ஆகியவற்றை அணிந்து ஈடுபட்டால் எடுத்த அனைத்து நற்காரியமும் சீராகவும், சிறப்பாகவும் நிறைவுபெறும் என்ற போதனையையும் செய்துள்ளார்கள்.

கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையத்தில் ஜோதிடப் பயிற்சி பெற்ற அனைத்து மாணவ மணிகளும் இப்பேரவையின் உறுப்பினர் ஆகிறார்கள். சேவை உள்ளம் கொண்ட கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலைய மாணவர்கள் அனைவரும் கார்த்திகா ஜோதிடப் பேரவையில் உறுப்பினர் ஆகலாம். அதுமட்டுமன்றி உறுப்பினர் கட்டணம் என இதுவரை பேரவையால் எந்தத் தொகையும் நிர்ணயிக்கப்படவில்லை. பிற்காலங்களில் உறுப்பினர் கட்டணம் தேவை எனில் பேரவை தீர்மானத்தின் பேரில் அது குறித்து பரிசீலிக்கப்படும். அதுவரை கட்டணம் இன்றியே பேரவை உறுப்பினராக தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். இப்பேரவையின் சேவைப் பணிகள் குறித்த அனைத்து விபரங்களும் அவ்வப்பொழுது இதன் உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படும். கார்த்திகா ஜோதிடப் பேரவையில் இணைந்து தெய்வ சேவையையும், மக்கள் சேவையையும் இணைந்து செய்து இப்பிறவிப் பயனை நமது குருஜி அவர்களின் நல்லாசியுடன் நிறைவேற்ற உறுதியேற்போம்.

நிர்வாகி
கார்த்திகா ஜோதிடப் பேரவை,
கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையம்,
227, ஹனுமந்தாபுரம், தாராபுரம் – 638 656,
திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி : 04258 – 220883, 290883.
Mobile Phone : +91 94430 83109.
e-mail : karthikasiddarth@yahoo.co.in

Scroll to Top