பராபவ வருடம்

மிக்கப ராபவத்தின் மேதினியிற் பின்மழையாம்
தக்க பசுக்க டழைக்குமே – இக்குப்
பலிக்காது நான்குவகைப் பல்லுயிர்க்கு மின்பம்
கலிக்கா தெனவே கருது.

– இடைக்காடர் சித்தர்

பொருள்

பராபவ வருடத்தின் பின்பகுதி காலத்தில் உலகில் நல்ல மழை பெய்யும். பசுக்கள் (செல்வம்) தழைத்துப் பெருகும். பூமியில் விளையும் கரும்பு, தானியங்கள் ஆகியவை பயன்தரும் வகையில் விளைச்சலைக் கொடுக்காது. தாவர இனம், விலங்கினம், ஊர்வன மற்றும் நீர்வாழினம் ஆகிய நான்கு வகைப்பட்ட உயிர்களுக்கும் மற்றும் பல நுண்ணுயிர்களுக்கும் எந்த சுகமும் கிடைக்காது. இவை பல சிரமங்களுக்கு உள்ளாக நேரிடும்.

அருளுரை

பராபவ வருடப் பிறப்பாகிய இந்த நாள் முதல் இவ்வாண்டு முழுவதும் தாங்கள் தங்கள் குடும்பம் மற்றும் நல்ல நட்புகளுடன் உடல் ஆரோக்கியத்தையும், பயனுள்ள கல்வியையும், அறிவாற்றலையும், எதிரிகளை வெல்லும் திறமையையும், ஆதாயமான நிலபுலன்களைப் பெற்றும், முழுமையான அன்புடன் கூடிய உறவுகளுடனும், பெரியோர் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றும், நிரந்தர தொழில் மற்றும் மனநிறைவான உத்யோகத்துடனும், செய்தொழில் நிறைவான லாபத்தை அடைந்தும், தொழில் நஷ்டம் மற்றும் வீண் செலவுகளிலிருந்து பாதுகாப்பைப் பெற்றும், நீண்ட ஆயுளுடன் இறையருளால் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறோம்.

அன்புள்ள,
குருஜி.

நிர்வாக அலுவலகம்

நிர்வாகி
கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையம்,
227, ஹனுமந்தாபுரம், தாராபுரம் – 638 656,
திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி : 04258 – 220883, 290883.
Mobile Phone : +91 94430 83109.
e-mail : karthikasiddarth@yahoo.co.in

 

Scroll to Top